சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிராக ஹட்டனில் போராட்டம்

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிராக ஹட்டனில் போராட்டம்

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி மலையக மக்களின் காணி உரிமை இயக்கத்தின் பெண்கள் அமைப்பு ஹட்டனில் இன்று (29) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இதன்போது பெண்கள் தலையில் கருப்புப்பட்டி அணிந்து பதாகைகளை ஏந்தி, ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும், இனி இவ்வாறு நடக்க கூடாது, பிள்ளைகளின் கல்வி வேண்டும், சிறுவர்;கள் பாதுக்காக்கப்பட வேண்டும என்று கோஷம் எழுப்பினர்.

முற்பகல் 11 மணிமுதல் மதியம் 12 மணிவரை இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் போது சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதுடன் ஹட்டன் பொலிசார் கடமைகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

P1.jpg

P2.jpg

P5.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image