அதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

அதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு கல்வி அமைச்சினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அதிபர் மற்றும்  ஆசிரியர்கள் அது தொடர்பில் விரைவில் அறியப்படுத்துமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஏதேனும், மாகாணங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணிகுழாமினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லையாயின், உடனடியாக தாம் கடமையாற்றும் வலைய கல்வி காரியாலயத்திற்கு அறிவிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image