போராட்டம் வெற்றி: ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுவிப்பு

போராட்டம் வெற்றி: ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுவிப்பு

8 நாட்களின் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேர் கைதுசெய்யப்பட்டு. பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 
இதையடுத்து,  ஜோசப் ஸ்டாலின் 16 பேரை  தனிமைப்படுத்த பொலிஸார்  நடவடிக்கை எடுத்தனர்.
 
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டனர். அத்துடன். தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவாறு இணையவழி ஊடக சந்திப்புக்களை நடத்தி, தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், தங்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தினார்.
 
இதேநேரம், ஆசிரியர் சங்கங்கள், இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளன.
 
இந்த நிலையில், 8 நாட்களின் பின்னர், முல்லைத்தீவு - கேப்பாபுலவு வான்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து அவர்கள் இன்று மாலை விடுவி;க்கப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image