'ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்' மஸ்கெலியாவில் போராட்டம்

'ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்' மஸ்கெலியாவில் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மஸ்கெலியா பிரேதச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினரை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது 1,000 ரூபா வேதனம் முறைப்படி வழங்கப்படல் வேண்டும், அவர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

photo_1_1.jpg

 

photo_7.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image