பயணக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: புதிய சுகாதார வழிகாட்டல் இதோ...

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: புதிய சுகாதார வழிகாட்டல் இதோ...

சுகாதார அமைச்சினால், புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் கோவை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 
இதற்கமைய, நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள், இன்று முதல் மேலும் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
 
அனைத்து வழிபாட்டுத் தளங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
திருமண நிகழ்வுகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், மண்டபக் கொள்ளளவில் 25 சதவீதமானோருடன் அல்லது அதிகபட்சமாக 150 பேருடன் திருமணங்களை நடத்தலாம்.
 
கொவிட் அல்லாத மரணங்களின்போது, சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இறுதிக் கிரியைகள் இடம்பெற வேண்டும். இதன்போது, 50 பேர் பங்கேற்க முடியும் என புதிய சுகாதார வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image