பிரச்சினைகளுக்கு தீர்வில்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை- அரச தாதியர் சங்கம் எச்சரிக்கை

பிரச்சினைகளுக்கு தீர்வில்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை- அரச தாதியர் சங்கம் எச்சரிக்கை

தாதியர் சேவையில காணப்படும் பிரச்சினைகளுக்கு நாளைக்குள் (30) தீர்வு பெற்றுத் தராவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

தாதியர் சேவைக்கு தாக்கம் செலுத்தும் பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டபோதிலும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் இவ்வறிவிப்பை விடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாதியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசு சுகாதார பிரிவு பிரதானிகளுடன் கலந்துரையாடியபோதும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. குறிப்பாக தாதியர்களின் பதவியுயர்வு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் எட்டப்படவில்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image