முல்லைத்தீவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி

முல்லைத்தீவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சைனாபாம் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊடாக பல கொவிட் தொற்றாளர்கள் கடந்த மாதம் 17ஆம் திகதி இனம் காணப்பட்டுள்ள நிலையில், ஆடைத்தொழிற்சாலை ஒருமாத காலமாக மூடப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1200 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பணியாற்றி வருகின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்களுக்கான கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் நேற்று (24) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த தடுப்பூசிகள் மாவட்ட இராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் ஊடாக ஆடைத்தொழிற்சாலையில் வைத்து தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தங்களது ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா பரவல் ஏற்பட்ட பின்னர் தாங்கள் அச்சத்தோடு பணியாற்றி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி ஏற்றப்படுவது தமக்கு ஒரு ஆறுதலாக இருப்பதாகவும் இந்த செயற்பாட்டினால் தங்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகமும் அச்சமற்ற ஒரு நிலைமையில் வாழ வழிவகுக்கும் எனவும் ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image