திருமண வைபவங்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை

திருமண வைபவங்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை

நாட்டில் கொரோனா தொற்றை கருத்திற் கொண்டு எதிர்வரும் திருமண வைபவங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடல்கள் இரு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய தேசிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இத்தடையானது எதிர்வரும் 3ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தடையை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image