இலங்கையில் நாளொன்றில் அதிகளவான தொற்றாளர்கள் நேற்று பதிவாகினர்

இலங்கையில் நாளொன்றில் அதிகளவான தொற்றாளர்கள் நேற்று பதிவாகினர்

இலங்கையில் கொவிட்-19 பரவல் ஆரம்பம் முதல், நாளொன்றில் அதிகளவான நோயாளர்கள் நேற்று பதிவாகினர்.

1,531 பேருக்கு கொவிட்-19 நேற்று தொற்று உறுதியானது.

அவர்களில் ஆயிரத்து 491 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வந்த 40 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 106,484 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 95 ஆயிரத்து 445 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

10,372 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image