கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாடு முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21ம் திகதி விசேட விடுமுறை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (19) கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடம் நினைவையொட்டி இவ்விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 265 பேர் உயிரிழந்தனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image