தாதியரை கதிர்வீச்சு அறையில் சிறை வைத்த கதிரியக்க நிபுணர்கள்

தாதியரை கதிர்வீச்சு அறையில் சிறை வைத்த கதிரியக்க நிபுணர்கள்

தாதியர் இருவரை கதிர்வீச்சு அறையில் பூட்டி வைத்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாரகம அபேக்‌ஷா வைத்தியசாலை தாதியர் இருவர் இரு தினங்களுக்கு முன்னர் சுமார் ஒரு மணி நேரம் கதிர்வீச்சு அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இரு சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதே வைத்தியசாலையில் பணியாற்றும் கதிரியக்க நிபுணர்கள் இருவரே இவ்வாறு தாதியரை உள்ளே வைத்து பூட்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image