நேர்முகத்தேர்வினூடாக அதிபர் நியமனம்- தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

நேர்முகத்தேர்வினூடாக அதிபர் நியமனம்- தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

அதிபர் தெரிவுக்கான நடைமுறையை மாற்றி பதவியுயர்வுகளை வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுள்ளன.

குறித்த அமைச்சரவை அனுமதியை உடனடியாக வாபஸ் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ள கல்வித்துறைசார் தொழிற்சங்கங்கள், தாம் எடுக்கவுள்ள தீர்மானம் குறித்து எதிர்வரும் 9ம் திகதி கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிபர், ஆசிரியர் சங்கம், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம், உட்பட கல்விசார் தொழிற்சங்கங்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளன.

வழமையான போட்டிப்பரீட்சையின்றி, நேர்முகத்தேர்வினூடாக அதிபர் நியமனம் வழங்க அமைச்சரவை நேற்று (02) அனுமதி வழங்கியிருந்தது. இதனூடாக 4600 பேருக்கு அதிபர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Principal

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image