மேல் மாகாண பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

மேல் மாகாண பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

மேல் மாகாண பொது மக்களுக்கு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை இன்று (15) செலுத்த ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்ட, தொற்றுக்குட்படும் அபாயம் உள்ள, பொது மக்களுடன் நெருங்கி பழகுபவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 250,000 ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெக்கா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image