நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து தீர்மானமில்லை - இராணுவத் தளபதி

நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து தீர்மானமில்லை - இராணுவத் தளபதி

கொவிட்-19 புதிய வைரஸ் திரிபு நாட்டில் பதிவாகியுள்ளமையால், நாடு முழுமையாக முடக்கப்படவுள்ளது எனும் செய்திகள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தாலும், அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பாக அரசாங்கத்தால் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பதிவாகியுள்ளமை மற்றும் அதன் பரவல் தொடர்பான பதிவுகள் பற்றி அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், எதிர்வரும் காலங்களில் மக்களுடைய பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தகுந்த செயற்பாடுகளை சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கமைய மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image