ரயில் நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

ரயில் நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

ரயில் நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் சில கோரிக்கைகளை முன்னிவைத்து தமது கண்காணிப்பு கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று (10)  நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
 
திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள், ஆட்சேர்ப்பு முறைமையை துரிதமாக உருவாக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
 
இதுவரையில் தங்களது கோரிக்கைகள் தொடர்பில் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அத்துடன், போக்குவரத்து அமைச்சும் சாதாகமான பதிலை வழங்கவில்லை.
 
இந்த நிலையில், எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
 
தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, தொடருந்து சேவைகள் தாமதமாதல் மற்றும் இரத்துச்செய்யப்படுதல் இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image