பட்டதாரி பயிலுநர்கள் நியமனத் திகதி அறிவிக்கப்படாவிடின்...

பட்டதாரி பயிலுநர்கள் நியமனத் திகதி அறிவிக்கப்படாவிடின்...

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் நியமனத் திகதியை முன்கூட்டியே உறுதிப்படுத்தப்படாவிட்டால், இவ்வெதிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று இன்று (18) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரை தேசிய விழிப்புணர்வுக்கான தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து அபிவிருத்தி அதிகாரிகள் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகைளில் அபிவிருத்தி அதிகாரிகள் சக்தியை உருவாக்கவுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image