கொரோனா தடுப்பு மருந்து விரைவில் கிடைக்காது

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் கிடைக்காது

கொரோனா தடுப்பு மருந்து இலங்கைக்கு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கொரோனா வைரஸ் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை கொரோனா தடுப்பு மருந்தை நாட்டுக்கு இறக்குதி செய்வது தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் ஆரம்பிககவில்லை என்று தெரிவித்துள்ள அவர் உலகளவில் அனைத்து தடுப்பு மருந்துகளும் இன்னமும் சோதனை நிலையில் உள்ளன எனவும் உலக சுகாதார தாபனத்தின் அனுமதி இதுவரை எந்த மருந்துக்கும் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார தாபனத்தினால் அங்கீகரிக்கப்படும் சிறந்த தடுப்பு மருந்தை இலங்கை்கு இறக்குமதி செய்ய தயாராகவுள்ளதாகவும் தற்போது சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள மருந்துகள் தொடர்பில் இதுவரை விஞ்ஞானரீதியான தரவுகள் கிடைக்காதநிலையில் அதற்கான பொறுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா சூழல் குறித்த இலங்கை மிக அவதானத்துடன் இருப்பதாகவும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான அனுமதிகளுக்கு இன்னும் சில வருடங்கள் வரை செல்லக்கூடும் என்று தமக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார.
s

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image