2 ஆண்டு கால இடைவெளிக்கு பின் மீண்டும் ஆசிரியர் இடமாற்றங்கள்

2 ஆண்டு கால இடைவெளிக்கு பின் மீண்டும் ஆசிரியர் இடமாற்றங்கள்

இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த காலங்களில் அந்த செயற்பாடு பாதிப்படைந்திருந்தது.

எனினும் தற்போது இடமாற்றத்துக்கு விண்ணப்பிப்பதற்காக இணைய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது

தற்போது ஆசிரியர் இடமாற்றம் தாமதடைந்துள்ளதோடு, எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உடனடியாக அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆசிரிய சங்கங்கள் கோருகின்றன.

சூரியன் செய்திகள்

11ஆம், 12ஆம் திகதிகளில் வங்கிகள் திறக்கப்படுமா? இதோ அறிவித்தல்

ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image