பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா தீபாவளி முற்பணம் வழங்க சஜித் கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா தீபாவளி முற்பணம் வழங்க சஜித் கோரிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில், பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்களால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5,000 ரூபா வழங்கப்பட்டுவந்தது.

எனினும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையை கொண்டாட அந்தத் தொகை போதுமானதல்ல.

எனவே, எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பது பொருத்தமாக இருக்கும் என தான் பரிந்துரைப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image