கினிகத்தேனையில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 11 பேருக்கு கொவிட்

கினிகத்தேனையில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 11 பேருக்கு கொவிட்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 8 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக தொற்றாளர்கள் கல்வி கற்ற வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக்குரிய மாணவர்கள் கல்வி கற்ற வகுப்புகளுக்கு தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பை பேணியவர்கள் அனைவரும் சுயதனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த 500 மாணவர்கள் வரையில் வீடுகளில் இருக்க பணிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image