ஜனவரி 22 முதல் விமான நிலையங்களை மீள திறக்க நடவடிக்கை

ஜனவரி 22 முதல் விமான நிலையங்களை மீள திறக்க நடவடிக்கை

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காகவும்

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து வர்த்தக விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து இந்த நடவடிக்கையை எடுப்பதன் மூலம் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையினையினை மீள கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம் : சூரியன் எப் எம் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image