EPF வருடாந்த வட்டிவீதம் 4 வருடங்களுக்கு 9% வீதமாக நிர்ணயம்

EPF வருடாந்த வட்டிவீதம் 4 வருடங்களுக்கு 9% வீதமாக நிர்ணயம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களின் பங்களிப்புத் தொகையின் அடிப்படையிலான நன்மைகளுக்கான வட்டிவீதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், ஊழியர் சேமலாப நிதியத்திற்குச் சொந்தமான திறைசேரி பிணைமுறிகளை மீள்கட்டமைப்பதால் குறித்த நிதியத்தின் அங்கத்தவர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில், அதன் கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த ஐந்து வருட (05) காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்காக செலுத்தப்பட்டுள்ள வருடாந்த வட்டிவீத நன்மைகளைக் கருத்தில் கொண்டு, 2023-2026 வரை தொடர்ந்து வரும் நான்கு (04) வருடங்களுக்கு பங்களிப்புத் தொகை அடிப்படையில் உரித்தான வட்டிவீதத்தை குறைந்தபட்சம் 9% வீதமாக அமைய வேண்டுமென நிர்ணயிப்பதற்கு இயலுமாகும் வகையில், 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image