புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல (ATA) வரைவு தொடர்பாக இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல (ATA) வரைவு தொடர்பாக இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல (ATA) வரைவு தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆகியோர் தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு  சட்டமூல வரைவு தொடர்பாக உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன், அதுதொடர்பில் அவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள். சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image