வேட்புமனுக்களை இரத்து செய்யும் தீர்மானத்தை சட்டப்பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை

வேட்புமனுக்களை இரத்து செய்யும் தீர்மானத்தை சட்டப்பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மேற்கொண்ட தீர்மானத்தை சட்டப்பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பிரிவின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் குறித்த தீர்மானத்தை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். 

அதன் பின்னர் விசேட ஏற்பாடுகள் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அது சட்டமாக்கப்பட்டு வேட்புமனுக்களை இரத்து செய்ய முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். 

நன்றி - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image