தனியாரிடம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்: எரிசக்தி அமைச்சர்

தனியாரிடம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்: எரிசக்தி அமைச்சர்

அடுத்த வருடமும் தனியாரிடம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

இதற்கான அறிவித்தல் தற்போது வௌியிடப்பட்டுள்ளதாக X (Twitter) சமூக வலைத்தளத்தில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். 

2024 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சி குறைவான வருடமாக எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், முன்னேற்பாடாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். 

இந்த ஆண்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளமையினால், நீர்மின் உற்பத்தியை 3500 முதல் 3750 கிகாவாட் மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், அனல் மின் உற்பத்தியைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்தி வருவதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image