ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடையோரை கைதுசெய்ய உத்தரவு

ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடையோரை கைதுசெய்ய உத்தரவு

வெலிகடை காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்ணான ஆர்.ராஜகுமாரி என்பவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு - கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதுளை நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், கொழும்பு கொட்டா வீதியில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்துவந்த நிலையில் வெலிகடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், கடந்த மே மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image