ரத்வத்தை தோட்ட உதவி முகாமையாளரை கைதுசெய்யுமாறு பாராளுமன்றில் தமிழ் எம்.பிக்கள் போராட்டம்

ரத்வத்தை தோட்ட உதவி முகாமையாளரை கைதுசெய்யுமாறு பாராளுமன்றில் தமிழ் எம்.பிக்கள் போராட்டம்

மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடனடியாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தி பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை (22) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது.

இதன்போது,  தமிழ் எம்.பிகள் சிலர் ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈபட்ட தோட்ட உதவி முகாமையாளர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி சபையின் நடுவில் அமர்ந்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image