கந்தானையிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கந்தானையிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மற்றும் நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவினரும், கடற்படையின் தீயணைப்பு பிரிவினரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image