சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் முக்கிய தீர்மானம்

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் முக்கிய தீர்மானம்
சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (03) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
 
ஊடகங்களுக்கு கருத்துரைப்பதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கோரியும், அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட நிலைமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
இதனிடையே இன்று (02) சுகாதார அமைச்சின் செயலாளர் அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு  விடுத்துள்ளதாகவும் அதில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்திற்கு அமைய பணிபுறக்கணிப்பு குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image