மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறையில் மாற்றம்

மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறையில் மாற்றம்

மாணவர்களைப் பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறையில் கல்வி அமைச்சு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. எனினும், மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், அனைத்து மாணவர்களையும், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் பாடசாலைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், தமது சங்கத்தின் அழுத்தத்தின் பிரதிபலனாக அனைத்து மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாட்சாலைக்கு அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறுpப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image