அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வேறு தொழிலுக்கு விண்ணப்பிக்கும்போது...

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வேறு தொழிலுக்கு விண்ணப்பிக்கும்போது...
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வேறு தொழில்களுக்கு விண்ணப்பிக்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை தொடர்பான அறிவிப்பு  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
 
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அனைத்து மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகத்தின் சார்பில் மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் (நிர்வாகம்)  இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
தரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வேறு தொழிலுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக
 
இந்த திணைக்களத்தின் கீழ்  உங்கள் மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள தரம்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் பல்வேறு தொழில்களுக்காக விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பப்படிவத்தில், திணைக்களத்தில் தலைவரினால் கையொப்பம் இடவேண்டிய இடத்தில் கையொப்பமிடும் அதிகாரம் இதன் மூலம் உங்களுக்கு வழங்கப்படுகின்றது.
 
இதற்கமைய உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்படிவத்தில் திணைக்களத்தின் பிரதானி சார்பில் கையொப்பமிட்டு அதை உரிய நிறுவனத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் அறியத் தருகிறேன்.
 
275172353_515761576806324_3185082929172684292_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image